தொலைக்காட்சி

maandag 30 januari 2012

கோபத்தில் ரசிகரை தாக்கிய நடுவர்: பரிதாபமாக உயிரிழப்பு

கோபத்தில் ரசிகரை தாக்கிய நடுவர்: பரிதாபமாக உயிரிழப்பு
[ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 01:47.47 பி.ப GMT ]
வங்கதேசத்தில் கிரிக்கட் நடுவர் அளித்த தீர்ப்பை தவறு என கூறிய ரசிகரை, நடுவர் கிரிக்கட் மட்டையால் அடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். வங்கதேசத்தின் தாகா நகரில் உள்ளூர் கிரிக்கட் போட்டி நடந்தது. அப்போது நடுவர் அளித்த தீர்ப்பு தவறு என கூறி 15 வயதான நஸ்ரூல் இஸ்லாம் என்ற ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டார்.

ஆத்திரமடைந்த நடுவர் கிரிக்கட் மட்டையால் நஸ்ரூல் தலையில் ஓங்கி அடித்தார். ரத்தம் உறைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நஸ்ரூல் இறந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Geen opmerkingen:

Een reactie posten