தொலைக்காட்சி

donderdag 15 september 2011

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் ஒரு முன்னணி வார

இணைப்பு)
கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் ஒரு முன்னணி வார இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் ரஜினி பற்றி அவர் கூறியிருந்த தகவல்கள் சினிமாவுலகில் ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சூப்பர் ஸ்டார் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. ஏனாம்?

ரஜினியை இவருக்கு முன்பு அவரது நெருங்கிய நண்பர்களான சில முக்கியஸ்தர்கள் சந்தித்திருக்கிறார்கள். டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறாராம்.

கே.எஸ்.ரவிகுமாரும் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பத்திரிகையாளர் சோ இதுவரை இருபது முறைக்கு மேல் சந்தித்தாராம். ஆனால் அவர்கள் யாரும் ரஜினியை பற்றி மீடியாக்களிடம் வாய் திறக்காத போது இவர் மட்டும் அக்குவேறு ஆணி வேறாக புட்டு புட்டு எழுதியதைதான் பொறுக்க முடியவில்லையாம் ரஜினியால்.

இந்த பேட்டியில் ரஜினியை வெகுவாக பாதித்த விஷயம், அவர் இந்நாள் முதல்வரிடம் பேசியதையும், முன்னாள் முதல்வரிடம் பேசியதையும் வெளிப்படையாக போட்டு உடைத்தாரல்லவா? அதுதானாம்.

தனது சொந்த விருப்பு வெறுப்பை வைரமுத்து சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டாரே என்று கவலைப்பட்டதாக தெரிவிக்கிறது ரஜினி வட்டாரம்.







15 Sep 2011
58434 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது

Geen opmerkingen:

Een reactie posten