தொலைக்காட்சி

zondag 9 oktober 2011

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மரணம்!

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மரணம்!
[ சனிக்கிழமை, 08 ஒக்ரோபர் 2011, 05:04.36 PM GMT ]
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் வடிவேல் துஸ்ஜந்தன் இன்று கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமானார்.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உறுப்பினருமான வடிவேல் துஸ்ஜந்தன் (27 வயது) என்பவர் கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இவர் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவருடைய இழப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாரிய ஒரு இழப்பாகுமெனவும் அம்பாறை மாவட்டத்தின் ஒரு தமிழ் தேசிய பற்றாளரை நாம் இழந்துள்ளோமெனவும் அன்னாரிரின் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten