தொலைக்காட்சி

donderdag 13 oktober 2011

மட். வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் உயிர்பலியிடுதலை தடுத்து நிறுத்திய


யோகேஸ்வரன் எம்.பி.
[ வியாழக்கிழமை, 13 ஒக்ரோபர் 2011, 07:35.20 AM GMT ]
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாவெட்டுவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் மிருகங்களை உயிர் பலியிடும் நிகழ்வினை இவ் வருடம் மட். இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ. யோகேஸ்வரன் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இந்துக் கோயில்களில் மிருகங்களை உயிர்பலியிடும் சம்பவங்களை கடுமையாக எதிர்த்து வரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரான யோகேஸ்வரன் எம்.பி. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த காலங்களில் பாராளுமன்றத்திலும் விவாதித்திருந்தார்.
இதன் அடிப்படையிலேயே முன்னேஸ்வரம் போன்ற பல ஆலயங்களில் உயிர்பலியிடுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் உயிர்பலியிடும் நிகழ்வுகளை தடுத்துவரும் சீ.யோகேஸ்வரன் அதற்கு எடுத்துக்காட்டாக இம்முறை அவரது தலைமையில் நடைபெற்ற மேற்படி ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தில் மிருகங்களை உயிர்பலியிடும் நிகழ்வை தடுத்து நிறுத்தியுள்ளார்.
நேற்று புதன்கிழமை இவ்வாலயத்தின் சடங்கு உற்சவத்தை சீ.யோகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தியதுடன் அன்றைய தினம் நடைபெற்ற தீ மிதிப்பு நிகழ்வுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், அன்றைய தினம் நடைபெற்ற யாகபூசை நிகழ்வில் சீ.யோகேஸ்வரன் ஐயா, சிவஸ்ரீ.சா.ராமதாஸ் குருக்கள், சிவஸ்ரீ.எஸ்.விக்னேஸ்வரக் குருக்கள் உட்பட பல இந்துமதக் குருமார்கள் முழுநேர சேவையாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten