தொலைக்காட்சி

donderdag 25 augustus 2011

கிழக்கு மக்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்

கிழக்கு மக்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்
[ வியாழக்கிழமை, 25 ஓகஸ்ட் 2011, 08:13.22 AM GMT ]
கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம், உடனடியாக இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்துங்கள், சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை என இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்தியதாக வடமராட்சி கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளார்.
மேற்கண்டவாறு தினக்குரல்; பத்திரிகை நிறுவனத்திற்க்கு நேரடியாகத் தொடர்பு கொண்ட மக்கள் சிலர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில். நேற்று(புதன்கிழமை) காலை 8மணிதொடக்கம் வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வீடுகளிற்க்குள் நுழைந்த படையினர் கிறீஸ் மனிதன் வந்தால் அது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்குத் தெரியப்படுத்துங்கள்,
நீங்களாக அவர்களைப் பிடித்து அடிக்கவேண்டாம். அப்படி எதுவும் நடந்தால் உங்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தினர்.
எமது பகுதியில் நாளுக்கு நாள் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவித்தல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.
காலை தொடக்கம் ஒவ்வொரு வீடுகளிற்க்கும் சுமார் 5வரையான இராணுவத்தினர் வந்து மேற்படி அறிவித்தலைக் கொடுத்துள்ளனர். இராணுவத்தினர் அறிவித்தல் கொடுத்தபோது எங்களுடைய பாதுகாப்புக்காக நாங்கள் கிறீஸ் மனிதர்களைத் திருப்பித்தாக்கவேண்டும்தானே என சிலர் வினவியதற்க்கு அவ்வாறு சம்பவம் நடந்தால் உடனடியாக துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்படும் என இராணுவத்தினர் பதிலளித்தனர்.
வடமராட்சி கிழக்கில் தாளையடிப்பிரதேசத்தில் மட்டுமே பொலிஸார் உள்ளனர். எனினும் பொலிஸாரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே உள்ளது.
இதனால் இராணுவத்தினரின் கட்டுப்பாடு அதிகம் காணப்படுகின்றது. இது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தைத் தோற்று வித்திருக்கின்றது.
இந்நிலையில் உடுத்துறைப் பிரதேசத்தில் நேற்று மாலை 5.45மணியளவில் பிக்கப் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் பூவரசம் மரத்திலிருந்து பொல்லுக்கள் உருவாக்கக்கூடிய தடிகளை வெட்டிச் சென்றதை பிரதேச இளைஞர்கள் சிலர் நேரடியாக கண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள மக்கள் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவ வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
 

Geen opmerkingen:

Een reactie posten