தொலைக்காட்சி

zondag 27 november 2011

இலங்கையில் நவம்பர் மாதம் வருகிறதென்றால் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக்கொள்ளும்! ஜனாதிபதி மகிந்த

Photo
இலங்கையில் நவம்பர் மாதம் வருகிறதென்றால் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக்கொள்ளும்! ஜனாதிபதி மகிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 11:26.17 AM GMT ]
இலங்கையில் சில காலங்களுக்கு முன்னர் நவம்பர் 27ஆம்திகதி வருகிறதென்றால் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்ளும் பிள்ளைகளை ஒருவாரத்திற்கே பாடசாலைக்கு அனுப்பவதற்கு பயப்படுவார்கள் ஆனால் இன்றைய நவம்பர் மறக்கமுடியாத பொன்நாளாக மாறியிருக்கிறது என மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்
தெற்கே அதிவெக நெடுஞ்சாலையினை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்.
அப்போதிருந்த அரசாங்கங்கள் அதனை அனுமதித்து சர்வதேசத்திற்கு காட்டினர். ஆனால் நாம் அதற்கு இம்முறை இடம்கொடுக்கவில்லை.
நான் பிரதமராக இருந்தபோது மன்னார் - மடுவில் வீதி ஒன்றை அபிவிருத்தி செய்தேன். அதனை திறந்து வைக்க மடு செல்ல வேண்டுமானால் புலிகளிடம் அனுமதி பெறவேண்டும் என கூறினர்.
பாதையை அமைத்து, பிரதமர் ஒருவர் அதனை திறக்க புலிகளிடம் அனுமதி கோர வேண்டி ஏற்பட்டது. ஆனால் நான் அனுமதி கோரவில்லை. அங்கு போகவும் இல்லை. அப்படியான நாட்டில்தான் இன்று அனுமதி இன்றி செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten