தொலைக்காட்சி

woensdag 30 november 2011

மனிதர்களை அழிக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்

மனிதர்களை அழிக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 09:54.10 மு.ப GMT ]
மனிதர்களையே அழித்துவிடக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட Flu வைரசினைக் கண்டுபிடித்தமை பற்றிய விபரங்களை நெதர்லாந்தின் விஞ்ஞானிகள் வெளியிடவுள்ளனர். இந்த அபாயகரமான வைரஸ் H5N1 பறவைக்காய்ச்சல் வைரசினை ஒத்ததாகும். ஆனால் இது அதனை விடவும் கிருமித்தொற்று மிக்கதென்றும் ஒரு தடவையிலேயே மில்லியன் கணக்கானோரில் கடத்தப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகின்றது.

இதனால் இந்த ஆய்வு சர்ச்சைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் விஞ்ஞானிகளையும் இரு பிரிவாகப் பிரித்துள்ளது.
ஒரு பகுதியினர் இதன் விபரங்களை வெளியிடக்கூடாது என்றும் சிலர இதனைச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பறவைக் காய்ச்சலின் வைரஸ் 500 பேரை மட்டுமே கொன்றது. அத்துடன் உலகளாவிய ரீதியில் பரம்பலடையாது. ஆனால் தற்போது உருவாக்கப்பட்ட வைரஸ் எதிரிகளின் கைகளில் கிடைத்துவிட்டால் மிகவும் ஆபத்தானதாக உள்ளதால் உயிரியல் போரிற்குப் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆய்வு சர்வதேசத்தினை H5N1 இனை முமுவதும் விளங்கிக்கொள்வதன் பாகமாகவே மேற்கொள்ளப்பட்டதென இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பினால் இக்குழு ஊடகத்தின் பாய்ச்சலினை எதிர்கொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவரீதியில் நல்லதாரு முன்னேற்றம் எனினும் துணைபோகக்கூடும் என்றும் கருதப்படுகின்றது.
இதனால் இதுபற்றிய விடயங்களை வெளியிடுவது தடுக்கப்படவேண்டுமென்றும் வெளியிடப்பட்டால் உயிரியல் தீவிரவாதத்திற்குத் துணைபோகும் காரியங்களைச் செய்பவர்களுக்கு இது உதவக்கூடுமென்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten