தொலைக்காட்சி

maandag 21 november 2011

உலகப் போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க தயார் – விமல் வீரவன்ச

உலகப் போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க தயார் – விமல் வீரவன்ச
[ திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011, 03:41.57 AM GMT ]
ஈரான் மீது மேற்குலக நாடுகள் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதனை தடுக்க முடியாது என்றும், உலக போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்கத் தயார் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் சூழ்நிலையினை எதிர்நோக்க இலங்கைத் தயார் நிலையில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக உலகப் போர் ஏற்பட்டால் நாட்டில் ஏற்படக் கூடிய உணவுப் பற்றாக்குறையை தீர்க்கக் கூடிய திட்டங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten